வேலூர் தொரப்பாடி பகுதியைச் சேர்ந்த லோகேஷ் குமார் (30) இவர் தனது சொந்த செலவிற்காக இந்தியன் வங்கியில் நகையை அடமானம் வைக்க சென்றுள்ளார்.அங்கு நகை மதிப்பீட்டாளரிடம் தான் கொண்டு வந்த 15 , சவரன் நகைக்கு எவ்வளவு பணம் கிடைக்கும் என விசாரித்துள்ளார்.
அதன் பின்பு லோகேஷ் குமார் வங்கியில் இருந்து வெளியில் வந்து தான் கொண்டு வந்த நகை பையை தன்னுடைய இருசக்கர வாகனத்தின் மீது வைத்து விட்டு தன்னுடைய உறவினர்களிடம் கைபேசியில் பேசிக் கொண்டு இருக்கும் பொழுது அங்கு திடீரென வந்த இரண்டு நபர்கள் லோகேஷ் குமார் வைத்திருந்த தங்கநகை பையை மின்னல் வேகத்தில் பறித்துக் கொண்டு தாங்கள் கொண்டு வந்த இருசக்கர வாகனத்தில் தப்பி சென்றுள்ளனர்.
லோகேஷ் குமார் கூச்சலிடவே அக்கம் பக்கத்தில் இருந்த பொதுமக்கள் கொல்லையில் ஈடுபட்டவர்களை இருசக்கர வாகனத்தில் துரத்தி சென்றுள்ளனர்.
வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வீட்டின் அருகே கொள்ளையர்களின் இருசக்கர வாகனம் விபத்தில் சிக்கி இருவரும் கீழே விழுந்து அங்கிருந்து ஓடிள்ளனர். துரத்தி சென்ற பொதுமக்கள் அவர்களை பின் தொடர்ந்து துரத்தி உள்ளனர். கொள்ளையில் ஈடுபட்ட மர்ம நபர்கள் துரத்திச் சென்ற பொது மக்கள் மீது பாட்டில் மற்றும் கற்களை கொண்டு தாக்கி அங்கிருந்து தப்பித்துள்ளனர்.
தகவல் அறிந்து அங்கு சென்ற வேலூர் தெற்கு போலீசார் கொள்ளையர்கள் பயன்படுத்திய இருசக்கர வாகனத்தை கைப்பற்றி விசாரணை நடத்தியதில் அந்த இருசக்கர வாகனத்தின் பதிவு எண் இன்னொரு வருடைய காரின் பதிவு எண்ணாக உள்ளதை கண்டறிந்தனர்.
லோகேஷ் குமார் அளித்த புகாரின் பேரில் வேலூர் தெற்கு போலீசார் கொள்ளை நடந்த இடத்தில் உள்ள சிசிடிவி காட்சிகளை வைத்து கொல்லையில் ஈடுபட்ட இரண்டு நபர்கள் யார் என்பதை குறித்து தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.