வேலூரில் உள்ள டாஸ்மாக் குடோன் வளாகத்தில் சிவகங்கை மாவட்டத்தில் டாஸ்மாக் ஊழியர் படுகொலை செய்யப்பட்டதை கண்டித்தும் மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தினர்
வேலூரில் சிவகங்கை மாவட்டம் டாஸ்மாக் கடை எண்-7721 கடையில் பணிபுரிந்து வந்தவர் அர்ஜுனன் கடந்த சில வாரங்களுக்கு முன்பு பெட்ரோல் குண்டு வீசி படுகாயம் அடைந்த அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் மரணம் அடைந்தார்.
இதனை கண்டிக்கும் வகையிலும் அவருக்கு இரங்கல் தெரிவிக்கும் நிகழ்ச்சி வேலூர் தோட்டப்பாளையம் பகுதியில் உள்ள தமிழ்நாடு சேமிப்பு கிடங்கு நிறுவனம் வளாகத்தில் வேலூர் மாவட்ட அனைத்து டாஸ்மாக் சங்க கூட்டுக் குழுவின் சார்பில் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி மெழுகுவர்த்தி ஏற்றி மௌன அஞ்சலி செலுத்தி கண்டனம் தெரிவித்தனர்.