வேலூர் மாநகராட்சியில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி மற்றும் திட்டப் பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தலைமையில் நடைபெற்றது.
வேலூர் மாநகராட்சியில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி மற்றும் திட்டப் பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் மாண்புமிகு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தலைமையில் கூட்டரங்கில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் தமிழ்நாடு நிலையான நகர்ப்புற அபிவிருத்தி திட்டம் மற்றும் 15ஆவது நிதிக்குழு மானிய திட்டம் போன்ற பல்வேறு திட்டங்களின் கீழ் நடைபெற்று வரும் தார் சாலைகள், சிமெண்ட் சாலைகள் மற்றும் கான்கிரீட் ஃபேவர் பிளாக் அமைக்கும் பணிகள் குறித்தும், மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நாள்தோறும் திடக்கழிவுகளை தூய்மை பணியாளர்களின் மூலம் சேகரித்தல், அந்த திடக்கழிவுகளை இயற்கை உரங்களாக மறுசுழற்சி செய்தல், மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள 145 பூங்காக்கள் மற்றும் விளையாட்டு திடல்களை சரியான முறையில் பராமரித்தல், 10 நகர்ப்புற சுகாதார நிலையங்களில் பொதுமக்களுக்கு வழங்கப்படும்.
சிகிச்சை முறைகள். மாநகராட்சியில் உள்ள 166 நீர்த்தேக்க தொட்டிகளை தூய்மையாக பராமரிப்பது குறித்தும், மாநகராட்சியின் 57 தொடக்கப் பள்ளிகள், 26 நடுநிலைப் பள்ளிகள், 7 உயர்நிலைப் பள்ளிகள் மற்றும் 3 மேல்நிலைப் பள்ளிகளில் மாணவர்களின் கற்றல் திறன் ஆசிரியர்களின் கற்பிக்கும் திறன் ஆகியவற்றை மேம்படுத்த தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல், மாநகராட்சி பள்ளிகளின் தேர்ச்சி விகிதத்தை அதிகரித்தல் குறித்தும்,எரிவாயு தகன மேடை, மயான பூமிகளை முறையாக பராமரித்தல்மாநகராட்சியில் உள்ள 50 சமுதாய கழிப்பிடங்கள், 19 கட்டண கழிப்பிடங்கள், ஒரு பொது கழிப்பிடம் ஆகியவற்றை தூய்மையாக சுகாதாரத்துடன் பராமரித்தல் குறித்தும், நடைபெற்று வரும் குடிநீர் பணிகள் குறித்தும் பாதாள சாக்கடை திட்டம், கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள், மாநகராட்சி எல்லையில் உள்ள தெருவிளக்குகளை பராமரித்தல் மேலும் தேவையான இடங்களில் புதிய தெருவிளக்குகளை அமைத்தல் போன்ற பல்வேறு
திட்ட பணிகள் குறித்தும் விரிவாக ஆலோசிக்கப்பட்டது. மாண்புமிகு நீர்வளத் துறை அமைச்சர் அவர்கள் தெரிவித்ததாவது:
கடந்த மாதம் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் கள ஆய்வில் முதலமைச்சர் திட்டத்தை தொடங்கி வைத்து மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நேரடியாக கள ஆய்வு மேற்கொண்டார், அந்த ஆய்வுக்குப் பிறகு நடைபெற்ற கலந்தாலோசனைக் கூட்டத்தில் வேலூர் மாநகராட்சியில் நடைபெற்று வரும் வளர்ச்சி மற்றும் திட்டப் பணிகள் குறித்து என்னுடைய தலைமையில் ஆய்வுக் கூட்டங்களை நடத்தி பணிகளின் முன்னேற்றம் குறித்த விபரங்களை தெரிவிக்க அறிவுறுத்தியதன் அடிப்படையில் இந்த கூட்டம் தற்பொழுது நடைபெற்று வருகிறது.
மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் சாலைகளை சீரமைத்தல் தேவையான இடங்களில் புதிய சாலைகளை அமைத்தல் போன்ற பணிகளை துரிதப்படுத்தவும், சாலைகளில் திடக்கழிவுகள் மற்றும் தேவையற்ற பொருட்கள் தேங்காமல் அன்றாடம் தூய்மையாக பராமரிக்கவும் அறிவுறுத்தினார்.
வேலூர் மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்டம் நான்கு கட்டங்களாக செயல்படுத்த திட்டமிட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்பணிகளை விரைந்து முடிக்கவும் ஒப்பந்தத்தில் குறிப்பிட்டுள்ள காலத்திற்குள் பணிகளை முடிக்க எதுவாத பணிகளை துரிதப்படுத்தவும் அறிவுறுத்தினார். அம்ருத் திட்டத்தில் நடைபெற்று வரும் குடிநீர் திட்ட பணிகளை விரைந்து முடிக்கவும். நாள் ஒன்றுக்கு நபர் ஒருவருக்கு தேவையான 135 லிட்டர் குடிநீரை வழங்குவதற்கு விரைந்து வழிவகை செய்யவும் அறிவுறுத்தினார், விரைந்து இறு போறை
ஆலோசனைக் கூட்டங்கள் நடத்தப்பட்டு ஒவ்வொரு பணியின் முன்னேற்றம் குறித்து விரிவாக ஆய்வு செய்யப்படும். எனவே சம்மந்தப்பட்ட அலுவலர்கள் தங்களுடைய பணிகளை கூர்ந்து கண்காணித்து நிறைவேற்ற வேண்டும் என மாண்புமிகு நீர்வளத் துறை அமைச்சர் திரு. துரைமுருகன் அவர்கள் தெரிவித்தார்.
இந்த ஆய்வுக் கூட்டத்தில் வேலூர் பாராளுமன்ற உறுப்பினர் து. மு. கதிர் ஆனந்த், மாவட்ட ஆட்சித் தலைவர் பெ. குமாரவேல் பாண்டியன், சட்டமன்ற உறுப்பினர்கள் ஏ. பி. நந்தகுமார், ப. கார்த்திகேயன், மேயர் சுஜாதா ஆனந்தகுமார், துணை மேயர் எம். சுனில் குமார், மாநகராட்சி ஆணையாளர் ரத்தினசாமி, மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.