திருவள்ளூர் பிப்.25
அத்திப்பட்டு புது நகரில் புதிய புறக் காவல் நிலையம் ஆவடி காவல் ஆணையாளர் சந்திப் ராய் ரத்தோர் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.
திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அடுத்த அத்திப்பட்டு முதல் நிலை ஊராட்சியில் அடங்கிய அத்திப்பட்டு புது நகர் பகுதியில்,புதிய புறக்காவல் நிலையம் திறப்பு விழா நடைபெற்றது, இவ்விழாவிற்கு செங்குன்றம் காவல் மாவட்ட துணை ஆணையாளர் மணிவண்ணன், காவல் உதவி ஆணையாளர் முருகேசன்,மீஞ்சூர் ஆய்வாளர் சிரஞ்சீவி, அத்திப்பட்டு ஊராட்சி மன்ற தலைவர் சுகந்தி வடிவேல், உள்ளிட்டோர்கள் தலைமை வகித்தனர், ஊராட்சி மன்ற துணைத் தலைவர் எம் டி ஜி கதிர்வேல் வரவேற்புரை நிகழ்த்தினார்.
இதில் சிறப்பு அழைப்பாளராக ஆவடி காவல் ஆணையாளர் சந்திப் ராய் ரத்தோர் கலந்துகொண்டு புற காவல் நிலையத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார், மேலும் இப்பகுதிகளில் குற்ற சம்பவங்களை தடுக்கவும் திருட்டு, வழிப்பறி, உள்ளிட்டவர்களை தடுக்கவும்,போக்குவரத்து தடை நீக்கவும், பெண்களுக்கு பாதுகாப்பு அளித்திடவும், உள்ளிட்ட பல்வேறு தேவைகளை பூர்த்தி செய்திட இப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ளது என்றும், இதில் தயார் நிலையில் 10 காவலர்கள் எப்பொழுதும் பணியாற்றுவார்கள் என்றும்,பொதுமக்கள் எந்த வித பிரச்சனைகள் இருந்தாலும் உடனே இந்த காவல் நிலையத்தை தொடர்பு கொண்டு பயனடைய வேண்டும் என பேசினார், இதில் போக்குவரத்து மற்றும் புலனாய்வு துறை இன்ஸ்பெக்டர் ராஜேஷ், மீஞ்சூர் சப் இன்ஸ்பெக்டர் டில்லி பாபு, போக்குவரத்து வெற்றிவேல். ஊராட்சி செயலர் பொற்கொடி முருகானந்தம், வார்டு உறுப்பினர் கோமதிநாயகம்.அத்திப்பட்டு ரவி. உள்ளிட்ட திரளான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.