கள்ளக்குறிச்சி மாவட்டம், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் மூலம் செயல்படுத்தப்படும் தீனதயாள் உபாத்யாய-கிராமின் கௌசல்ய யோஜனா (DDU-GKY) திட்டத்தின் கீழ் “வேலைவாய்ப்பு முகாம்” 25.03.2023 சனிக்கிழமை அன்று உளுந்தூர்பேட்டை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் காலை 10.00 மணிக்கு நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் ஷ்ரவன்குமார்தெரிவித்துள்ளார்.
படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் தங்களுக்கு விருப்பமான தனியார் நிறுவனங்களில் வேலைவாய்ப்பு பெறும் நோக்குடன் வட்டார அளவில் “வேலைவாய்ப்பு முகாம்” நடத்தப்படவுள்ளது. தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் மூலம் செயல்படுத்தப்படும் தீனதயாள் உபாத்யாய-கிராமின் கௌசல்ய யோஜனா (DDU-GKY) திட்டத்தின் கீழ் “வேலைவாய்ப்பு முகாம் 25.03.2023 சனிக்கிழமை அன்று உளுந்தூர்பேட்டை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் காலை 10.00 மணிக்கு நடைபெறவுள்ளது.
இந்த வேலைவாய்ப்பு முகாமில், உளுந்தூர்பேட்டை மற்றும் திருநாவலூர் வட்டாரத்தை சார்ந்த 18 முதல் 35 வயதிற்குட்பட்ட வேலைவாய்ப்பற்று இளைஞர்களுக்கு தொழில் சார்ந்த தனியார் நிறுவனங்களில் வேலைவாய்ப்பு ஏற்படுத்தி தரப்படும். எனவே, உளுந்தூர்பேட்டை மற்றும் திருநாவலூர் வட்டாரத்தில் தகுதி உள்ள அனைத்து ஆண்/பெண் இருபாலரும் தங்களது ஆதார் அட்டை மற்றும் கல்வி நகுதி சான்றிதழ்களுடன் கலந்துகொண்டு தங்களின் கல்வித் தகுதிற்கேற்ப விருப்பமான வேலைவாய்ப்பு பெற்று பயனடையுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளார்.