வேலூர் மாவட்டம் :
ஏடிஎம் கொள்ளை சம்பவத்திற்க்கு பின் மாநில எல்லைகளில் உள்ள சோதனைச் சாவடிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு நவீன தொழில்நுட்பம் கொண்ட கேமராக்கள் பொருத்தப்பட்டு கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவர் வேலூர் சரக டிஐஜி முத்துசாமி பேட்டி.
வேலூர் மாவட்டம்:
குடியாத்தத்தில் காவல் துறை துணை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் ஆய்வு மேற்கொண்ட வேலூர் சரக டிஐஜி முத்துசாமி செய்தியாளர்களிடம் பேசியபோது,
திருவண்ணாமலையில் ஏடிஎம் திருட்டு சம்பவத்துக்குப்பின், வேலூர் சரகத்தில் உள்ள வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை மாவட்டங்களில் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இரவுநேர ரோந்துப் பணிக்கு காவலர்கள் கூடுதலாக நியமிக்கப்பட்டுள்ளனர். மாநில எல்லையில் உள்ள சோதனைச் சாவடிகளில் ஒரு உதவி ஆய்வாளர், 2- காவலர்கள் பணியில் இருந்தனர். தற்போது காவலர்கள்
எண்ணிக்கை 4- ஆக உயர்த்தப்பட்டுள்ளது. 24- மணிநேரமும் சோதனைச் சாவடிகளில் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படுவர். சோதனைச் சாவடிகளில் பாதுகாப்பு பலப்படுத்தும் பொருட்டு அங்கு நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் பணி தொடங்கப்பட்டுள்ளது.
வங்கிகள், ஏடிஎம் மையங்களில் கண்காணிப்பு கேமராக்கள், அலாரம் பொருத்தவும், காவலாளிகளை நியமிக்கவும் வங்கி நிர்வாகங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. வேலூர் சரகத்தில் நடைபெறும் சாலை விபத்துகளை குறைக்கும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இதன் தொடக்கமாக விபத்து நடக்கும் இடங்கள்
தீவிரமாக ஆய்வு செய்யப்படுகின்றன. எதனால் விபத்து நடந்தது, விபத்துக்கான காரணம், விபத்தைத் தவிர்க்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள், சாலைகள் சீரமைப்பு குறித்து உரிய துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி, விபத்துகளை தவிர்க்கும் நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ள சைபர் குற்றங்கள் குறித்து பொதுமக்கள், மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. கஞ்சா விற்பனையை முற்றிலும் தவிர்க்கும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன என வேலூர் சரக டிஐ ஜி முத்துசாமி செய்தியாளர்கள் கூறினார்.