வேளாண் பணிகளை குறித்த காலத்தில் செய்து முடிக்கும் கால விரயத்தை தவிர்க்கவும் வேலை ஆட்களின் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யவும் வேளாண் இயந்திர மயமாக்கல் இன்றியமையாதது ஆகிறது அறுவடை காலங்களில் மாவட்டத்தில் உள்ள நெல் அறுவடை இயந்திரங்களின் விவரங்கள் தெரியாததால் விவசாயிகள் இயந்திரங்களை வாடகைக்கு பெறுவதில் மிகுந்த சிரமம் ஏற்பட்டு வந்தது தமிழகத்தில் உள்ள விவசாயிகள் குறித்த காலத்தில் நெல் அறுவடை செய்ய எதுவாக தனியாருக்கு சொந்தமான நெல் அறுவடை இயந்திரங்களின் உரிமையாளர் பெயர் விலாசம் அலைபேசி எண் போன்ற விவரங்கள் வட்டாரம் மற்றும் மாவட்ட வாரியாக உழவன் செயலில் வேளாண்மை பொறியியல் துறையின் மூலம் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் தனியாருக்கு சொந்தமான 324 சக்கரவகை அறுவடை இயந்திரங்களும் 1 டிராக் வகை அறுவடை இயந்திரங்களும் உழவன் செயலில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது அறுவடை இயந்திரங்கள் தேவைப்படும் விவசாயிகள் உழவன் செயல் மூலம் தங்கள் இருப்பிடத்திற்கு அருகில் உள்ள அறுவடை இயந்திர உரிமையாளர்களை அலைபேசி மூலம் தொடர்பு கொண்டு தாங்களே வாடகை தொகை நிர்ணயம் செய்து பயன் அடையலாம் என மாவட்ட ஆட்சித் தலைவர் வளர்மதி அவர்கள் தெரிவித்துள்ளார்.