தூத்துக்குடி திருநெல்வேலி தென்காசி கன்னியாகுமரி ஒருங்கிணைந்த மாவட்டத்திற்கான 108 அவசர ஊர்திக்கு ஆள் சேர்ப்பு முகாம் 13 ம் தேதி திருச்செந்தூர் செந்தில் ஆண்டவர் அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியில் வைத்து நடைபெற இருக்கிறது.
தமிழகம் முழுவதும் 108 ஆம்புலன்ஸ் செயல்படுகிறது. இதில் பணிபுரிய மருத்துவ உதவியாளர்கள் மற்றும் ஓட்டுநர் பணிக்கான ஆள்சேர்ப்பு முகாம் வரும் 13ஆம் தேதி சனிக்கிழமை தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் செந்தில் ஆண்டவர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் வரும் 13ஆம் தேதி சனிக்கிழமை நடைபெற இருக்கிறது.
மருத்துவ உதவியாளருக்கான தகுதிகள்
Bsc nursing, GNM , ANM,
DMLT (12 ம் வகுப்பிற்குப் பிறகு இரண்டு ஆண்டுகள் படித்திருக்க வேண்டும்)
LIFE SCIENCE – Bsc Zoology, Botany ,Bio Chemistry, Microbiology Biotechnology , Plant Biology இதில் ஏதோ ஒரு பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்.
மாத ஊதியம் ரூபாய் 15435(மொத்த ஊதியம்)
நேர்முக தேர்வு அன்று 19 வயதிற்கு மேலும் 30 வயதிற்கு மிகாமலும் இருக்க வேண்டும்.ஆண் பெண் இருபாலரும் விண்ணப்பிக்கலாம்.

தேர்வு முறையானது
1. எழுத்து தேர்வு
2. மருத்துவ நேர்முகம் முதலுதவி அடிப்படை செவிலியர் பணி தொடர்பானவை
3. மனித வளத்துறையின் நேர்முகத் தேர்வு
இத்தேர்வுகளில் தேர்வு செய்யப்படுபவர்கள் 50 நாட்களுக்கு முழுமையான வகுப்பறை பயிற்சி, மருத்துவமனை மற்றும் ஆம்புலன்ஸ் சார்ந்த நடைமுறை பயிற்சி அளிக்கப்படும். பயிற்சி காலத்தில் தங்கும் வசதி செய்து தரப்படும்.
ஓட்டுநருக்கான தகுதிகள் பின்வருமாறு:
ஓட்டுநருக்கான தகுதிகள்,
பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
மாத ஊதியம் ரூபாய் 15235(மொத்த ஊதியம்)
நேர்முகத் தேர்வு அன்று 24 வயதிற்கு மேலும் 35 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும் .
162.5 cm குறையாமல் இருக்க வேண்டும் .
இலகுரக வாகன ஓட்டுநர் உரிமம் எடுத்து குறைந்தபட்சம் மூன்று ஆண்டுகள் மற்றும் Badge வாகன உரிமம் எடுத்து குறைந்தபட்சம் ஒரு ஆண்டுகள் நிறைவு பெற்றிருக்க வேண்டும்.
ஆண் பெண் இருபாலரும் விண்ணப்பிக்கலாம்.
தேர்வு முறை
1. எழுத்து தேர்வு
2. தொழில்நுட்ப தேர்வு
3. மனித வளத்துறை நேர்காணல்
4. கண் பார்வை சம்பந்தப்பட்ட தேர்வு
5. சாலை விதிகளுக்கான தேர்வு
இத்தேர்வுகளில் தேர்வு செய்யப்படுபவர்களுக்கு பத்து நாட்கள் பயிற்சி அளிக்கப்படும்.
மேலும் விவரங்களுக்கு
7397724822,
7397724853,
7397724848
என்ற எண்களுக்கு தொடர்பு கொள்ளலாம்.
தூத்துக்குடி மாவட்டம்
செய்தியாளர் : ந.பூங்கோதை.